Friday, June 11, 2010

வீரகனூர்

சேலம் மாவட்டம், கங்கவள்ளி வட்டத்தில் சேலம் மாவட்டத்தின் எல்லையில் பெரம்பலூர் மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்த அழகிய அமைதியான ஒரு சிறிய நகர பஞ்சாயத்து.

பச்சமலை ஒருபுறமும், கொல்லி மலையின் கொடை சுவேத நதி அதே புறமும், அது உண்டாக்கிய ஏரி மறுபுறமும் ஏரி கரையில் குன்றமும் அதில் குடி கொன்ற குமரனும், சைவத்திற்கு கங்கா சௌந்தர் ஈஸ்வரர் கோவிலும் வைணவத்திற்கு கஜவரதராஜ பெருமாள் கோவிலும் சக்தி வழிபாட்டிற்கு மாரி, காளி, அங்காளி, பொன் ஒளி என கோவில்கள் நிறைந்த ஊர்.